பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவுமான எம்சி சேகர் (91) வயது மூப்பு காரணமாக காலமானார்.
இயக்குனர் பி வாசுவின் தந்தையும், மேக்கப் கலைஞருமான பீதாம்பரத்தின் தம்பியான சேகர், 1986ல் திரையுலகில் அறிமுகமானார். ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரிக் ஷா மாமா, சரத்குமாரின் கூலி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
பி வாசுவின் அனேக படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது சாகோதரர் பீதாம்பரத்துடன் இணைந்து சில படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
எம்சி சேகரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.