இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவுமான எம்சி சேகர் (91) வயது மூப்பு காரணமாக காலமானார்.
இயக்குனர் பி வாசுவின் தந்தையும், மேக்கப் கலைஞருமான பீதாம்பரத்தின் தம்பியான சேகர், 1986ல் திரையுலகில் அறிமுகமானார். ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரிக் ஷா மாமா, சரத்குமாரின் கூலி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
பி வாசுவின் அனேக படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது சாகோதரர் பீதாம்பரத்துடன் இணைந்து சில படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
எம்சி சேகரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.