இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வசூல் சாதனை படைத்த கன்னடப் படம் 'காந்தாரா'. இப்படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை படைத்து 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.
அதன்பிறகு ஓடிடி தளத்திலும் வெளிவந்து எண்ணற்ற ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்தனர். இப்போது உலக அளவிலான ரசிகர்களை ஈர்ப்பதற்காக படத்தை ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து ஓடிடியில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து 'காந்தாரா' படத்தையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தகவலைப் பகிர்ந்து, “தெய்வீகத்தால் மயங்கவும்,” என ரிஷாப் ஷெட்டி தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும் 'காந்தாரா' வெளியாவதால் இந்த தெய்வீக மணம் உலகம் முழுவதிலும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.