புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் விஜய் ஆண்டனி ‛பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக முதலில் மலேசியாவில் சிகிச்சை பெற்றவர் பின்னர் சென்னையில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு ஆபரேஷனும் நடந்தது. ஆபரேஷனுக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ‛‛அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.