புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகை ஹன்சிகா கடந்தாண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் இவர்களது திருமணம் பிரமாண்டமாய் நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடி வந்த ஹன்சிகா மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஹன்சிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் அவருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றும், திருமண வாழ்த்தும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, ‛‛ஒரு மகள் தாய் வீட்டிற்கு வரும் உணர்வை இங்கு வந்தது தருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தில் இன்று முதல் நடிக்கிறேன். இந்தாண்டு எனது 7 படங்கள் ரிலீஸாக உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. அந்தவகையில் இந்தாண்டு எனக்கு லக்கியான ஆண்டு. தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய காலத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது'' என்றார்.