படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நடிகை ஹன்சிகா கடந்தாண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் இவர்களது திருமணம் பிரமாண்டமாய் நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடி வந்த ஹன்சிகா மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஹன்சிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் அவருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றும், திருமண வாழ்த்தும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, ‛‛ஒரு மகள் தாய் வீட்டிற்கு வரும் உணர்வை இங்கு வந்தது தருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தில் இன்று முதல் நடிக்கிறேன். இந்தாண்டு எனது 7 படங்கள் ரிலீஸாக உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. அந்தவகையில் இந்தாண்டு எனக்கு லக்கியான ஆண்டு. தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய காலத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது'' என்றார்.