புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய்சேதுபதி படிக்கும் முதல் வெப் தொடர் பார்சி. இதனை பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ், டீகே இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராஷி கண்ணா, கேகே மேனன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த தொடரில விஜய்சேதுபதி துணிச்சலும், நேர்மையும் மிக்க உயர்போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் தலைமையிலான கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இதன் கதை. 8 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.
இதுகுறித்து விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாகித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. என்றார்.