அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் படங்கள் இல்லை என்றாலும், பிற மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் நடித்த வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் தற்போது திரைக்கு வந்துள்ளன. அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் ஐதராபாத்தில் நடைபெற்றபோது அதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு மனநல பிரச்னை ஏற்பட்டதின் காரணமாகத்தான் அவர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அது குறித்து உடனடியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ‛‛எனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதினால் தான் வால்டர் வீரய்யா படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பரப்பப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நல்ல முயற்சி என்றும் அதற்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.