அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என பலர் நடிக்கிறார்கள். வருமான வரித்துறை சார்பில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, சினிமாவை ரசிகர்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்க வேண்டும். தங்களது உயிரையும் விடும் அளவுக்கு எல்லாம் சினிமாவில் ஒன்றுமில்லை. அதனால் அனைத்து ரசிகர்களும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். தற்போது தளபதி 67வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்களில் புதிய அப்டேட் எதிர்பார்க்கலாம் என்றார். மேலும் தமிழ்நாடா? தமிழகமாக? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டை எப்போதும் தமிழ்நாடு என்று சொல்ல விரும்புவேன் என்றார்.