மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
முன்னணி நடிகையாக இருக்கும்போதே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. அவர் நடிக்க வேண்டிய சில படங்களில் இருந்து விலகி இருக்கிறார். அவரும் முழு ஓய்வெடுக்க முடிவு செய்திருந்தார், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அண்மையில் அவர் ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க மும்பை சென்றபோது அவர் கையில் ஜெபமாலை இருந்தது. அதன் பிறகு அவர் ஐதராபாத்தில் சாகுந்தலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதும் அவர் கையில் ஜெபமாலை வைத்திருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். என்றாலும் அதில் அதிக ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். புத்தாண்டு, கிறிஸ்மஸ் தினங்களில் மட்டும் தேவாலயத்திற்கு சென்று வந்தார். தற்போது மன அமைதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் எப்போதும் பிரார்த்தனை செய்து வருகிறார். அதனால் ஜெபமாலையை எப்போதும் கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.