பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சிரஞ்சீவி உடன் வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீர சிம்ஹா ரெட்டி, பிரபாஸ் உடன் சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவற்றில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படங்கள் வருகிற சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர், நடிப்பு துறையில் வயது குறைந்தவர்கள் வயது அதிகமானவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் யாருடனும் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அதுமட்டுமின்றி வயதான ஹீரோக்களுடன் இரு மடங்கு வயது குறைவான நடிகைகள் ஜோடி சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது நீண்ட காலமாகவே சினிமாவின் நடைபெற்று வருகிறது. இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிகம் சம்பளம் தரப்படுவதினால் தான் இது போன்ற ஹீரோக்களுடன் நான் நடிப்பதாக ஒரு கருத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் தான் வாங்குகிறேன். இளம் ஹீரோ, வயதான ஹீரோ என்றெல்லாம் நான் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை என்கிறார் ருதிஹாசன்.