சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 3 டி தொழில் நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகி வரும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த நிலையில், சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் ஆறு கெட்டப்புகளில் நடித்திருந்தார் விக்ரம். இந்த நிலையில் தற்போது கமல், விக்ரமை மிஞ்சு வகையில் தனது 42 வது படத்தில் 13 வேடங்களில் நடிக்கிறார் சூர்யா.