தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தை தொடங்கப் போவதாக சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் நாயகன் யஷை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை பகிர்ந்து கேஜிஎப் 3 என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.