இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

எங்கேயும் எப்போதும் பட புகழ் சரவணன் இயக்கத்தில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛ராங்கி'. அதிரடி ஆக் ஷன் கலந்த கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இதில் அந்நாட்டை சேர்ந்த ஆலிம் என்ற இளைஞனை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளார் சரவணன்.
சோஷியல் மீடியா மூலம் பழகும் பழக்கத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எதில் போய் முடிகிறது என்று பரபரப்பாக நகரும் முருகதாஸ் எழுதிய கதையை சரவணன் இயக்கி உள்ளார். இன்றைய காலத்தில் சமூகதுக்கு தேவையான மெசேஜ் ஒன்றையும் இந்த படத்தில் சொல்லி உள்ளனர். படத்தில் திரிஷாவின் நடிப்பிற்கு பின் ஆலிமின் நடிப்பு பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். அந்தளவுக்கு, லவ், எமோஷன் என சிறப்பாக அவர் நடித்துள்ளாராம். நாளை(டிச., 30) வெள்ளியன்று படம் வெளியாகிறது.