‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்து தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதிமுக மற்றும் பா.ஜ., குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து வந்த சித்தார்த், திமுக ஆட்சி வந்ததும் அரசை குற்றம்சாட்டுவது குறைந்துள்ளது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தனது பெற்றோரை ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதாவது: கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையம் வந்த வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




