புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ்செல்வி விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஹினிமூனுக்காக ரித்திகா கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாக 'பாக்கியலெட்சுமி' தொடரிலிருந்து ரித்திகா விலகிவிட்டார் என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அதேசமயம் ரித்திகாவோ, சீரியல் குழுவோ அதுபோன்ற எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஹினிமூனை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ள ரித்திகா பாக்கியலெட்சுமி சீரியலில் மீண்டும் இணைந்துள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட, வீடியோவையும் புகைப்படங்களையும் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து இதை உறுதிசெய்துள்ளார். ரித்திகா மீண்டும் சீரியலில் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.