வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ்செல்வி விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஹினிமூனுக்காக ரித்திகா கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாக 'பாக்கியலெட்சுமி' தொடரிலிருந்து ரித்திகா விலகிவிட்டார் என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அதேசமயம் ரித்திகாவோ, சீரியல் குழுவோ அதுபோன்ற எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஹினிமூனை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ள ரித்திகா பாக்கியலெட்சுமி சீரியலில் மீண்டும் இணைந்துள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட, வீடியோவையும் புகைப்படங்களையும் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து இதை உறுதிசெய்துள்ளார். ரித்திகா மீண்டும் சீரியலில் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.