புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
எதையாவது புதிதாக செய்தால்தான் ரசிகர்களை கவர முடியும் என்பதால் தற்போதைய இளைஞர்கள் புதிதுபுதிதாக யோசிக்கிறார்கள். அந்த வரிசையில் ஜெகன் வித்யா என்பவர் ஒரே திரையில் இரண்டு படங்களை காட்டும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். படத்தின் டைட்டில் பிகினிங். இந்த படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர மூர்த்தி இசை அமைக்கிறார். வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ஜெகன் வித்யா கூறியதாவது: ஒரே திரையில் இரண்டு படங்களை திரையிடுவதை 'ஸ்பிலிட் ஸ்கிரீன்' என்று சொல்வார்கள். திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
ஒரே திரையில் ஓடும் இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கும், கடைசியில் இரு கதைகளும் ஒன்றாக இணையும், இது உலகிலேயே புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சில குறும்படங்கள் இதுபோன்று வந்திருக்கிறது. ஒரு முழுநீள திரைப்படமாக ஆசியாவிலேயே புதிய முயற்சி என்று சொல்லலாம். என்கிறார்.