மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
எதையாவது புதிதாக செய்தால்தான் ரசிகர்களை கவர முடியும் என்பதால் தற்போதைய இளைஞர்கள் புதிதுபுதிதாக யோசிக்கிறார்கள். அந்த வரிசையில் ஜெகன் வித்யா என்பவர் ஒரே திரையில் இரண்டு படங்களை காட்டும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். படத்தின் டைட்டில் பிகினிங். இந்த படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர மூர்த்தி இசை அமைக்கிறார். வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ஜெகன் வித்யா கூறியதாவது: ஒரே திரையில் இரண்டு படங்களை திரையிடுவதை 'ஸ்பிலிட் ஸ்கிரீன்' என்று சொல்வார்கள். திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
ஒரே திரையில் ஓடும் இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கும், கடைசியில் இரு கதைகளும் ஒன்றாக இணையும், இது உலகிலேயே புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சில குறும்படங்கள் இதுபோன்று வந்திருக்கிறது. ஒரு முழுநீள திரைப்படமாக ஆசியாவிலேயே புதிய முயற்சி என்று சொல்லலாம். என்கிறார்.