ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். வித்தியசாமான படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த 'நானே வருவேன்' படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை, விமர்சனங்களையும் பெறவில்லை. 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக அந்தப் படத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது.
இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஆண்டில் 'பீஸ்ட்' படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அடுத்து 'சாணி காயிதம்' படத்திலும், 'நானே வருவேன்' படத்திலும் நடித்தார். தற்போது 'பகாசுரன்' படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் 'கருத்தான' பதிவுகளைப் போடுபவர் செல்வராகவன். அந்த விதத்தில் நேற்று 'தடுக்கி விழுவது' பற்றிய ஒரு அட்வைஸ் பதிவு போட்டுள்ளார். அதில், “இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து, எதையாவது பிடித்து கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த அட்வைஸை அவர் இயக்குனர் செல்வராகவனுக்காக சொல்லிக் கொண்டாரா அல்லது பொதுவாக சொல்லிக் கொண்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.