வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
எல்லா முன்னணி நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார் பொன்னியின் செல்வன் பூங்குழலி. அதாவது ஐஸ்வர்ய லட்சுமி. எதில் முதலிடம் தெரியுமா? அவர்தான் இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர். அவர் நடித்த 9 படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. இது ஒரு சாதனை அளவாகும். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நடிகை நடித்த 9 படம் வெளிவரவில்லை என்கிறார்கள்.
தமிழில் புத்தம்புது காலை விடியாதா, கார்கி, பொன்னியின் செல்வன், கேப்டன், கட்டா குஸ்தி படங்களும், மலையாளத்தில். அர்ச்சனா நாட் அவுட், குமாரி ஆகிய படங்களும், தெலுங்கில், அம்மு, கோட்சே என்ற படங்களும் அவர் நடித்து வெளியானது. இதில் கார்கி மற்றும் குமாரி படங்களை ஐஸ்வர்ய லட்சுமி தயாரித்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம், மலையாளத்தில் கிறிஸ்டோபர், கிங்க ஆப் கோதா படங்களில் நடித்து வருகிறார்.