மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1987ம் ஆண்டு காந்திநகர் ரெண்டவா வீதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கவுதமி. ரஜினி, பிரபு நடித்த குரு சிஷ்யன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஏராளமான சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது துப்பறிவாளன் 2, மற்றும் சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் கவுதமி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அவர் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இது தவிர புற்றுநோயில் இருந்து போராடி மீண்ட அவர் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கவுதமி மலேசியாவில் உள்ள, ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
கவுதமி கூறும்போது, “மலேசியாவின் ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் எனது பணியைத் தொடரவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஒரு அற்புதமான உந்துதலாக இருக்கிறது. எனது பயணத்தில் தங்கள் அன்புடனும் ஆதரவுடனும் இணைந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.