கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்டனரான சோஹைல் கத்துரியா என்பவருக்கும் நாளை டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் வழக்கமான 'சங்கீத்' நிகழ்வுகளாக இல்லாமல், சுபி என்றழைக்கப்படும் முஸ்லிம் முறைப்படியான இசை நிகழ்வுகள் நேற்றைய சிறப்பம்சமாக இருந்துள்ளது. அதில் முஸ்லிம் முறைப்படியான ஆடை அலங்காரங்களை ஹன்சிகா செய்திருந்தார். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் மணமகன் சோஹைல் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்று இரவு திருமணத்திற்காக வந்துள்ள விருந்தினர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருக்கும் திருமண ஜோடி பின்னர் மும்பை வர உள்ளார்களாம். அங்கு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.