நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கான பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக சர்ச்சை எழுந்தது. அதைப் படமாக்கச் சென்ற செய்தியாளர்களை படக்குழுவினர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுதான் 'வாரிசு' படத்தின் ஆந்திரா, தெலங்கானா சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. அடுத்து இந்த சர்ச்சையை படக்குழுவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.