துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அஜித்தை பொறுத்தவரை திரையுலகைச் சேர்ந்த எந்த விதமான விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். அதேசமயம் தனது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக் பயணம் தவிர, தனது குழந்தைகள் சம்பந்தமான நிகழ்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சி என செலக்டிவான சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த சமயத்தில் தன்னை ரசிகர்களுடன் எந்த தயக்கமுமின்றி புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை அவரை ஒரு ரசிகராக எதிர்பாராதவிதமாக சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நீண்ட நாளைக்கு பிறகு அஜித்தை சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு பல வருடங்களுக்கு மனதில் போற்றி பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். சோஷியல் மீடியாவில் எப்போதுமே அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பவர்கள் என்பதால் இருதரப்பு ரசிகர்களும் இந்த சந்திப்பை வரவேற்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அஜித் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.