வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? |
காஞ்சனா- 3 படத்தை அடுத்து ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி- 2, துர்கா என ராகவா லாரன்ஸின் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில் ருத்ரன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரமுகி- 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிகாரம் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நயன்தாராவின் 81 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதோடு, ராகவா லாரன்ஸும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.