மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் மும்பை நடிகையான பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் சல்மான்கான் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் பூஜா ஹெக்டே. தனது காலில் கட்டு போட்ட நிலையில் தான் வீட்டில் அமர்ந்தபடி சிகிச்சை எடுத்து வரும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், விபத்துக்கு பிறகு தான் நன்றாக தேறி வருவதாக தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே விரைவில் திரிவிக்கிரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா சமீபத்தில் இறந்ததை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் மீண்டும் மகேஷ்பாபு 28வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து பூஜா ஹெக்டேவும் நடிக்க இருக்கிறார். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் மகரிஷி என்ற படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.