கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாலிவுட் சினிமாவின் பிக் பி என அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன். இப்படி அவர்களது பெயரின் பிற்பகுதியில் இணைத்துள்ள பச்சன் என்கிற பெயர் ஜாதியை குறிக்கவில்லை என்கிற ஒரு தகவலை தன்னிலை விளக்கமாக கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கோன் பனேகா குரோர்பதி 14-ஆவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ருச்சி என்கிற பெண் போட்டியாளரிடம் அமிதாப் பேசும்போது, உங்கள் பெயரின் பின்னால் துணை பெயர் எதுவும் இல்லையே.. என்ன காரணம் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அந்தப்பெண் துணைப்பெயர் வைத்துக் கொள்ளும்போது அது நமக்கு சாதிரீதியாக ஒரு அடையாளத்தை கொடுத்து விடுகிறது. நம்முடைய முதல் பெயரே நம்முடைய தனித்தன்மையை சொல்வதாக இருக்க வேண்டும். அதனால்தான் எந்த ஒரு துணைப்பெயரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் தன்னிலை அளிக்கும் விதமாக, தனது பெயருக்குப் பின்னால் பச்சன் என்கிற துணைப்பெயர் எப்படி இனிந்தது என இதுவரை வெளியிடாத ஒரு காரணத்தை கூறினார்.
“பச்சன் என்பது ஒரு ஜாதியின் பெயரோ அல்லது ஒரு சமூகப் பிரிவோ அல்ல.. அது என்னுடைய தந்தையின் செல்லப்பெயர்.. என்னை பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியர் என் தந்தையிடம் என் பெயருக்கு துணைப்பெயர் என எதுவும் இல்லையே என்று கேட்டபோது, பச்சன் என சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அப்போது இருந்துதான் அமிதாப் பச்சன் என என் பெயர் மாறியது” என்று கூறினார் அமிதாப் பச்சன்.