ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'விக்ரம்'. அப்படத்தின் வெற்றியும், வசூலும் கமல்ஹாசனை மேலும் சில பிரம்மாண்ட படங்களை எடுக்க தைரியத்தைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்று மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக உள்ள 'கமல்ஹாசன் 234'வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
'விக்ரம்' படத்தின் வெற்றியால் சில பல சர்ச்சைகள், பஞ்சாயத்துகளால் நின்று போன 'இந்தியன் 2' படத்தை மட்டும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவுகளை எட்டி படத்தை உடனடியாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்த படத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்ததுதான் அதற்கு முக்கிய காரணம் என்றும் சொன்னார்கள். 'விக்ரம்' படத்தை விட பெரும் வெற்றியை 'இந்தியன் 2' படத்தால் கொடுக்க முடியும் என்பதே அதற்கு முக்கிய காரணம்.
அதே சமயம், ஆறு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிக்க ஆரம்பமாகி, அமெரிக்காவில் ஒரு கட்டப் படப்பிடிப்பும் நடந்த 'சபாஷ் நாயுடு', மற்றும் அறிவிக்கப்பட்டு, சில வீடியோ புரமோஷன்களும் செய்யப்பட்ட 'தலைவன் இருக்கின்றான்' ஆகிய படங்களை மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அடுத்து ஷங்கருடன் 'இந்தியன் 2', மணிரத்னத்துடன் 'கமல்ஹாசன் 234' என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான்' ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிப்பாரா என்பது சந்தேகம்தான் என்பது கோலிவுட் தகவல்.