ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? |
சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே படங்களில் நடித்திருந்தார். தற்போது நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், ‛நான் காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நிறைய நடித்துவிட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் உள்ளன. மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளேன். கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடித்துள்ளேன். எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனரை நான் நிர்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்' என்றார்.