நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய படங்களில் 'சென்னை 28, மங்காத்தா, மாநாடு' பெரிய வெற்றி பெற்ற படங்கள். தற்போது தெலுங்கு, தமிழில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ்' படம் நாளை(அக்.,21) தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. அதற்காக நேற்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் உடனுக்குடன் பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.
அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயனிடம், “புரோ, நாம எப்போ ஷுட்டிங் போலாம், அப்புறம் நம்ம அனுதீப் உங்களை ஏதாவது டார்ச்சர் பண்ணாரா,” எனக் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன், “ஷுட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார். அந்த கதை எப்ப சார் கேக்கலாம்…அதே மாதிரி இன்னொரு கேள்வி எனக்கு இருக்கு சார். நான் உங்ககிட்ட கேக்கறேன். அந்தப் படத்துல பிரேம்ஜி பிரதரோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன், அதைத் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன் சார்,” என பதிலளித்தார்.
சிவகார்த்திகேயனின் கேள்விக்கு, ''கதையா” என்று ஒரு வார்த்தையில் மட்டும் பதிலளித்து வடிவேலுவின் குட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இதுவரையிலும் தன்னுடைய படங்களில் கதை என்பது இருந்ததே இல்லை என்று எப்போதுமே ஜாலியாகப் பேசுவார். ஆனால், 'மாநாடு' கதைக்கும், திரைக்கதைக்கும் அவருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.