300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழ் சினிமாவின் முன்னணி கலை இயக்குனர்களில் ஒருவர் கிரண். தயாரிப்பு வடிவமைப்போடு, நடிகராகவும் இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் கிரணும் ஒருவர். நேற்று அவருடைய டுவிட்டரில் 1989ம் ஆண்டில் அவர் இளம் ரஜினி ரசிகராக இருந்த போது எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “1989ல் தலைவர் ரஜினிகாந்த் சாருடன்…. பல வருடங்களுக்குப் பிறகு எனது நீண்ட நாள் கனவு நேற்று மாலை நிறைவேறியது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம், நன்றி சார்…எனது அன்புக்குரிய நெல்சன் டார்லிங், உன்னால் மட்டுமே இது நடந்தது…ஜெயிலர்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “மிகச் சிறந்த தருணம், பல வருட கனவு, நீங்கள் ரொம்ப இனிமையானவர் சார், கடந்த இரண்டு நாட்களாக உங்கள் குரலைக் கேட்கிறேன், 'சோ ஸ்வீட்', எனது அன்புக்குரிய நெல்சன் டார்லிங், மீண்டும் நன்றி,” என தான் இன்னமும் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை உணர்த்தும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் ரசிகர்கள் கிரணின் பதிவுக்கு லைக்குகளைக் குவித்து வருகிறார்கள்.