தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வரும் அக்டோபர் 21ம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீசாகவிருக்கும் படம் 'மான்ஸ்டர்'. கடந்த 2016ல் மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக் மீண்டும் அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள படம் இது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த படத்திற்கான முன்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் இந்த படம் அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் இந்தப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த விஷயம் படத்தில் மையமாக இடம் பெற்றுள்ளது என்றும் இதுபோன்ற விஷயங்களை கொண்ட படங்களுக்கு அரபு நாடுகளில் வெளியிட தடை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மோகன்லால் ஒரு பேட்டியில் கூறும்போது கூட மலையாள சினிமாவில் இது ஒரு துணிச்சலான முதல் முயற்சி என்று சொல்லலாம் என படம் குறித்து சூசகமான ஒரு தகவலை கூறியிருந்தார். ஒருவேளை அவர் இதுபற்றித்தான் குறிப்பிட்டிருப்பார் போலும். தற்போது அரபு நாடுகளில் இந்த படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நிவின்பாலி நடிப்பில் அதே தேதியில் வெளியாக இருக்கும் படவேட்டு படத்திற்காக திரையரங்குகள் ஒதுக்கியுள்ளதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.
இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து மறு சென்சார் செய்து படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.