ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல வருடங்களாகவே உலக அளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி 'எப்எம்எஸ்' என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். 'எப்எம்எஸ்' என்பதற்கு 'பாரின் மலேசியா சிங்கப்பூர்' என்று அர்த்தம். ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள்தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் தரும் நாடுகளாக இருந்தது. அதற்குப் பிறகு இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இப்போதும் பேச்சு வழக்கில் சினிமாத் துறையினர் 'எப்எம்எஸ்' என்று அழைத்தாலும் அது 'ஓவர்சீஸ்' என்று வளர்ந்துவிட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் துறையில் வேலைக்குச் சென்ற எண்ணற்ற தமிழர்கள், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியவர்களால் அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கடந்த 15 வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் இதுவரையில் அதிக வசூலை அங்கு பெற்றுள்ளன.
அந்த விதத்தில் இதுவரையில் அமெரிக்காவில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. 6 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலாகப் பெற்றுள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்தால் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை, அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 40 கோடி. எனவே, 50 கோடியைக் கடக்கவில்லை. முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் 50 கோடியைக் கடந்துள்ள முதல் படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' பெற்றுள்ளது.