பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மணிரத்னம் இயக்கி கடந்த 30ம் தேதி திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்து ரூ.500 கோடியை கடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறிய பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், பொன்னியின் செல்வன் படம் 400 கோடியை கிராஸ் பண்ணி விட்டது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம். எழுப்பினால் இன்னும் ஒரு 100 என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் வெளியான போது ராஜராஜ சோழன் இந்துவா? இந்து மதம் இல்லையா? என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இயக்குனர் வெற்றிமாறன் அது குறித்து கருத்து வெளியிட்ட நிலையில் கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.