தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் |
மணிரத்னம் இயக்கி கடந்த 30ம் தேதி திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்து ரூ.500 கோடியை கடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறிய பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், பொன்னியின் செல்வன் படம் 400 கோடியை கிராஸ் பண்ணி விட்டது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம். எழுப்பினால் இன்னும் ஒரு 100 என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் வெளியான போது ராஜராஜ சோழன் இந்துவா? இந்து மதம் இல்லையா? என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இயக்குனர் வெற்றிமாறன் அது குறித்து கருத்து வெளியிட்ட நிலையில் கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.