ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றுள்ள நிலையில், படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் 3 பேர் இணைந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது. ஆனால், அவர்கள் யார்? யார்? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி ரெட்டி, மற்றும் சிபி புவனசந்திரன் ஆகியோர் தாய்லாந்து ரெஸ்டாரண்ட் ஒன்றில் அஜித்துடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், அந்த புகைப்படங்களில் அஜித்தே மூவருடனும் சேர்ந்து செல்பியை கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது வெளியிட்டுள்ள பாவ்னி, 'என்ன சொல்ல, எப்படி சொல்ல? சொன்னால் யார் நம்புவார்கள். அற்புதமான மனிதர்?' என அஜித்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜோடியாகவே அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ள அமீர் - பாவ்னிக்கும், பிக்பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு படவாய்ப்புக்காக காத்திருந்த சிபிக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக மூவருக்கும் அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.