ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
சின்னத்திரை பிரபலங்களான அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் சோஷியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்து பேசு பொருளாகியுள்ளது. முதல் கணவரை பிரிந்த திவ்யா, சின்னத்திரை நடிகர் அர்ணவை காதலித்து வந்த நிலையில் அவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த தகவலும் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
5 வயது குழந்தையுடன் திவ்யாவை ஏற்றுக்கொண்ட அர்னவின் பரந்த மனப்பான்மையையும், திவ்யா மீதான அவரது காதலையும் பாராட்டி பலரும் அப்போது அவரை புகழ்ந்தனர். ஆனால், இப்போது திவ்யாவும், அர்னவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். செல்லம்மா தொடரின் ஹீரோயின் அன்ஷிதாவுடன் அர்ணவுக்கு உறவு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள திவ்யா, இது தொடர்பான விவாதத்தில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா தன்னை மிரட்டுவதாகவும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள அர்ணவ், '2017 ஆம் ஆண்டு திவ்யா எனக்கு லவ் புரொபோஸ் செய்தார். அப்போது நான் ஷாக் ஆனேன். காரணம் அப்போது அவர் கணவருடன் இருந்தார். 6 மாதம் கழித்து விவகாரத்து பெற்றதாக கூறினார். ஆனால், கடந்த ஜனவரியில் தான் அவருக்கு விவகாரத்து ஆகியுள்ளது. அவர் தன் சொந்த குழந்தையையே தனது அக்கா குழந்தை என என்னிடம் சொல்லியிருந்தாள். இந்த உண்மை பிப்ரவரியில் தான் எனக்கு தெரிய வந்தது. இதை எல்லாம் கூட நான் பொறுத்துக்கொண்டேன்.
ஆனால், ரம்ஜான், பக்ரீத் என பண்டிகை நாட்களில் என் குடும்பத்தாரை பார்க்க ஊருக்கு கிளம்பினாள் தற்கொலை செய்து கொள்வேன் என என்னை மிரட்டுவார். இந்த ஹைபர் ஆக்டிவிற்காக மனநல சிகிச்சையும் எடுத்து வருகிறார். நான் கோயிலில் திருமணம் செய்தது எங்கள் வீட்டிற்கு தெரியாது. அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போடுவேன் என்று மிரட்டினார். என்னையும், என் குடும்பத்தையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என அவர் தான் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்' என்று திவ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் அர்ணவ்.
இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை? என்பது விரைவில் விசாரணையில் தெரியவரும்.