லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் த்ரிஷா எப்போதுமே ஐஸ்வர்யா ராய் பற்றி சிலாகித்தே பேசி வருகிறார்.
அதேசமயம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுநாள்வரை இவர்கள் ஒன்றாக பணியாற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நந்தினியும் குந்தவையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் சோழர்காலத்தின் செல்பி ராணிகள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்