பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள் பிறந்து பல வருட குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் தங்களது பிரிவைப் பற்றி அறிவித்தனர். ஆனாலும், சமீபத்தில் தங்களது மூத்த மகனின் பள்ளி நிகழ்ச்சிக்கு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா முதல் கணவரை விட்டுப் பிரிந்த பிறகு நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததைப் பற்றியும், குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கையில் குழந்தையுடனும், பின்னால் அப்பா ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, “என்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டில் கடவுள் எனக்குக் கொடுத்த சிறந்த பரிசு, எனது வீர் பாப்பா. எனக்குப் பின்னால் கடவுளின் இந்த அற்புத குழந்தை எப்போதும் இருப்பது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.