ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் பெரிய விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். அமெரிக்கத் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் வெளிநாடுகளில் வெளியாகும் படங்களுக்கும் சில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பல நாடுகள் அவர்கள் நாடுகளில் வெளியாகும் படங்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' என்ற படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளார்.
போட்டியில் இருந்த, 13 படங்களில் தமிழிலிருந்து 'இரவின் நிழல்', தெலுங்கிலிருந்து 'ஆர்ஆர்ஆர், ஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் குஜராத்திப் படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பட்டது. 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கருக்குத் தேர்வு செய்யப்படாதது குறித்து தெலுங்கு ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
'சிறந்த வெளிநாட்டுப் படம்' விருது வாங்க அந்தந்த நாடுகள் தேர்வு செய்து அனுப்பும் படங்களைத்தான் ஆஸ்கர் விருது குழு பரிசீலிக்கும். இருப்பினும், 'ஆர்ஆர்ஆர்' படம் நேரடியாக ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.