பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் நடிப்பில் அடுத்து, ‛நானே வருவேன்' படம் வெளியாக உள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கி உள்ள இந்த படம் இம்மாதம் ரிலீஸாக உள்ளது. அதைத்தொடர்ந்து வாத்தி படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு பின் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிப்பார் என தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தனுஷின் ‛நானே வருவேன்' படம் இறுதிக்கட்டத்தில் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை அடுத்தமாதம் துவங்க உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை பிரதேசம் மற்றும் காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.