தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தற்போது அவர் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தார்
படங்களில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். தற்போது அவர் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் பயிற்சி அளித்து வருகிறார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ‛‛எதிர்பாராத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வார இறுதியில் நான் திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டேன். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் ராஜசேகர பாண்டியன் எனக்கு ஊக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததற்கும் எனக்கு சில முறைகளை கற்பிப்பித்த அவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி எனக்கு ஒரு அற்புதமான அனுபவம். இப்போது நான் ரைபிள் கிளப்பின் கவுரவ உறுப்பினர் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. திருச்சியை அடுத்து சென்னையிலும் எனது துப்பாக்கிச்சூடு பயிற்சி தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.