மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இசை அரசி, இசைக்குயில்... என இன்னும் என்னனென்ன பட்டங்கள் கொடுக்க முடியுமோ அவை அனைத்திற்கும் பொருத்தமானவர் பாடகி பி.சுசீலா. பல்லாயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.தட்சணாமூர்த்தி ஆடிடோரியத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜி.ஆர்.கண்ணன் வழங்கும் "சுபம்" இசைகுழுவினரின் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. 54 ஆண்டுகளாக மேடைகளில் பாடி வரும் கண்ணனுக்கு பாராட்டு விழா இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு பி.சுசீலா தலைமை ஏற்கிறார்.
இந்த இன்னிசை நிகழ்ச்சியில் டி.எம்.எஸ் அவர்களின் மகன் பால்ராஜ், கோவை முரளி, டி.எல்.சங்கர்ராஜா, கே.வெங்கடேஷ், ஜி.கே.பார்த்திபன், ஜெய்ஸ்ரீ, உஷாராஜ், கல்யாணி கவுரி சங்கர், இசையமைப்பாளர் தீனா, மதன்பாப், ராஜேஷ் மயில்சாமி, அமிர்தா, ஜனனீ(மதன்பாப்) ஆகியோர் பங்கேற்று பாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இருக்கையில் அமர முன்கூட்டியே வர வேண்டும் என விழாக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.