புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
இசை அரசி, இசைக்குயில்... என இன்னும் என்னனென்ன பட்டங்கள் கொடுக்க முடியுமோ அவை அனைத்திற்கும் பொருத்தமானவர் பாடகி பி.சுசீலா. பல்லாயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.தட்சணாமூர்த்தி ஆடிடோரியத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜி.ஆர்.கண்ணன் வழங்கும் "சுபம்" இசைகுழுவினரின் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. 54 ஆண்டுகளாக மேடைகளில் பாடி வரும் கண்ணனுக்கு பாராட்டு விழா இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு பி.சுசீலா தலைமை ஏற்கிறார்.
இந்த இன்னிசை நிகழ்ச்சியில் டி.எம்.எஸ் அவர்களின் மகன் பால்ராஜ், கோவை முரளி, டி.எல்.சங்கர்ராஜா, கே.வெங்கடேஷ், ஜி.கே.பார்த்திபன், ஜெய்ஸ்ரீ, உஷாராஜ், கல்யாணி கவுரி சங்கர், இசையமைப்பாளர் தீனா, மதன்பாப், ராஜேஷ் மயில்சாமி, அமிர்தா, ஜனனீ(மதன்பாப்) ஆகியோர் பங்கேற்று பாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இருக்கையில் அமர முன்கூட்டியே வர வேண்டும் என விழாக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.