புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இசை அரசி, இசைக்குயில்... என இன்னும் என்னனென்ன பட்டங்கள் கொடுக்க முடியுமோ அவை அனைத்திற்கும் பொருத்தமானவர் பாடகி பி.சுசீலா. பல்லாயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.தட்சணாமூர்த்தி ஆடிடோரியத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜி.ஆர்.கண்ணன் வழங்கும் "சுபம்" இசைகுழுவினரின் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. 54 ஆண்டுகளாக மேடைகளில் பாடி வரும் கண்ணனுக்கு பாராட்டு விழா இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு பி.சுசீலா தலைமை ஏற்கிறார்.
இந்த இன்னிசை நிகழ்ச்சியில் டி.எம்.எஸ் அவர்களின் மகன் பால்ராஜ், கோவை முரளி, டி.எல்.சங்கர்ராஜா, கே.வெங்கடேஷ், ஜி.கே.பார்த்திபன், ஜெய்ஸ்ரீ, உஷாராஜ், கல்யாணி கவுரி சங்கர், இசையமைப்பாளர் தீனா, மதன்பாப், ராஜேஷ் மயில்சாமி, அமிர்தா, ஜனனீ(மதன்பாப்) ஆகியோர் பங்கேற்று பாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இருக்கையில் அமர முன்கூட்டியே வர வேண்டும் என விழாக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.