புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
பாலிவுட் என்றாலே கிளாமருக்கும், கவர்ச்சிக்கும் குறையிருக்காது. எங்கு வெளியில் சென்றாலும் பாலிவுட் நடிகைகளின் பின்னால் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்கள் செல்வார்கள். நடிகைகளிடம் விதவிதமாக போஸ் கொடுக்கச் சொல்லி புகைப்படங்களை எடுப்பார்கள். அந்த புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அதே சமயம் எந்த இடத்தில் எந்த ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதில் பாலிவுட் ரசிகர்கள் சரியாக விமர்சனம் வைப்பார்கள். ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகும் 'குட்பை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவுக்காக 'லெஹங்கா' ஆடை ஒன்றை அணிந்து சென்றார் ராஷ்மிகா. மேலாடை பகுதியில் பிகினி போன்ற வடிவமைப்பில் ஆடையும், அதற்கு மேல் மூடப்படாத கோட் ஒன்றையும் அணிந்திருந்தார். மிகவும் கிளாமராக இருந்த அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அதே சமயம் அதே ஆடையுடன் மேலாடை பக்கம் 'கோட்' ஐ மூடிய படி மும்பையின் பிரபலமான 'லால்பகுச்சா ராஜா' விநாயகர் சிலையை வழிபடச் சென்றிருந்தார். கடவுளை வழிபட அப்படி ஒரு ஆடையில் அவர் செல்லலாமா என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், விநாயகர் சிலை முன்பு நின்று கொண்டு அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது தவறு என்றும் அவ்வளவு கூட்டத்திற்கிடையில் ராஷ்மிகா சென்றதால் பாலியல் தொந்தரவு நடக்கவும் வாய்ப்புகள் உண்டு என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.