ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
''அனைத்து குடும்பங்களிலும் இருக்கிற, கோபத்தை மைய கருவாகக் கொண்டு 'சினம்' படம் எடுக்கப்பட்டுள்ளது'' என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'சினம்'. அருண் விஜய்க்கு ஜோடியாக, பாலக் லால்வனி நடித்துள்ளார். இப்படத்தில், அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 16ல், திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கில், 'சினம்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. இதில், நடிகர் அருண் விஜய், நடிகை பாலக் லால்வாணி பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் அருண்விஜய் கூறுகையில், ''அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தைதான், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அதனையே கதைக் கருவாக கொண்டு, இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர்தான், இந்த படத்தில் உள்ளது. சாதாரண சப்- இன்ஸ்பெக்டர். அவனுக்கும் ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து, அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபம் அடைகிறான் என்பதை, அழகாக இயக்குனர் அமைத்துள்ளார்,'' என்றார்.