எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'தெய்வமகள்' சீரியல் மூலம் சின்னத்திரையின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். திரைப்படங்களுக்காக வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் ஆப்ஷனை ஓகே செய்து நடித்து வந்தார். அதன்பின் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 'பகைவனுக்கு அருள்வாய்', 'கேசிநோ', 'பாயுமொளி நீ எனக்கு', 'மிரள்','தாழ் திறவாய்', 'ஊர்க்குருவி' மற்றும் 'காசிமேடு' என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இவற்றில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஆனால், ஒரு காலத்தில் இவர் சினிமாவில் நடிக்க சென்றபோது சில ஹீரோக்கள் இவரை சீரியல் நடிகை என்பதாலேயே ரிஜக்ட் செய்தனர். அப்படி மட்டுமே வாணி போஜன் பல படவாய்ப்புகளை இழந்துவிட்டார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்த வாணி போஜன் இன்று தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக, பிசியாக நடித்து வருகிறார். அன்று வாணி போஜனை ரிஜக்ட் செய்த ஹீரோக்கள் இன்று அவரது திறமையையும், புகழையும் பார்த்து தங்களுடன் சேர்ந்து நடிக்குமாறு தூது அனுப்பி வருகின்றனர். ஆனால், வாணி போஜனோ அவர்களுக்கு 'நோ' சொல்லி பதிலடி கொடுத்து வருகிறாராம்.