போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தமிழ் சினிமாவில் 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா. தொடர்ந்து 'கற்றது தமிழ்' படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா, டீனேஜ் வயதில் 'காதல் கசக்குதய்யா' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் கொள்ளை கொள்ளும் பேரழகால் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். தொடர்ந்து 'பள்ளிப் பருவத்திலே', 'மாயநதி', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் அவருக்கு ஹீரோயின் மார்க்கெட்டில் பெரிய அளவில் வரவேற்பில்லை.
இந்நிலையில், வெண்பா தற்போது சின்னத்திரையின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் தற்போது, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சந்தியாராகம்' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகைகளை விட பெயர், புகழ் பெற்று பிரபலங்களாக வலம் வரும் நிலையில், வெண்பாவின் இந்த சீரியல் என்ட்ரி திரைத்துறையில் அவருக்கு இரண்டாவது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.