புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சென்னை-28, சத்தம் போடாதே, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் நிதின் சத்யா. இவர் கடந்த ஞாயிறு இரவு தான் மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென எதிர்பாராத விதமாக மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நெரிசலில் நடிகர் நிதின் சத்யாவும் தனது காரில் பயணித்த போது ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டருகே உள்ள சிக்னலில் மாட்டிக்கொண்டார்.
அந்த சமயத்தில் நிதின் சத்யாவுக்கு சற்று அருகிலிருந்த மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்தது. அதேசமயம் நிதின் சத்யா அந்த விபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள நிதின் சத்யா மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக மழை நேரத்தில் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு செய்தியையும் அவர் அதில் கொடுத்துள்ளார்.