ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் சமீப நாட்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் கதையின் நாயகனாக நடித்த ஜோசப் மற்றும் தானே இயக்கி நடித்த பணி என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இன்னொரு பக்கம் தமிழில் கடந்த சில மாதங்களில் வெளியான ரெட்ரோ மற்றும் தக் லைப் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் உருவாகி வரும் 'வரவு' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு லொகேஷனில் இருந்து தங்குமிடத்திற்கு திரும்பிய போது அவரும் படக்குழுவினர் மூன்று பேரும் பயணித்த ஜீப் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. சிறிய காயங்களுடன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் உடன் வந்தவர்கள் உயிர் தப்பினாலும் மூணாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர். படப்பிடிப்பும் திங்கள் முதல் வழக்கம்போல தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.