ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.. இன்னும் திருமணம் ஆகாத லாவண்யா, அவ்வப்போது திருமண கிசுகிசுக்களில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் மெகா குடும்பத்தின் உறுப்பினர்களின் ஒருவருமான வருண் தேஜூடன், லாவண்யா திரிபாதி காதலில் விழுந்துள்ளார் என்றும், இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்தநிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட லாவண்யா திரிபாதி, உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இப்போது வரை சிங்கிளாக தான் இருக்கிறேன்.. எனக்கு ஏற்ற ஒரு நபரை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை.. வருண் தேஜூடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்ததாலும் அவருடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றதாலும் இதுபோன்ற கதைகளை பரப்பி விடுகிறார்கள்.. இதை யார் செய்கிறார்கள் என்பதும் கூட எனக்கு நன்றாகவே தெரியும். இதுபற்றி எல்லாம் நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளார் லாவண்யா திரிபாதி.