ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சமீபத்தில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு எதிராக ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். அதையடுத்து அவர் மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக திராவிட கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். பின்னர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கனல் கண்ணன். ஆனால் அவரது அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டார்கள். இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை தேடி வந்த காவல்துறையினர் தற்போது புதுச்சேரியில் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்துள்ளார்கள்.