ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எனது கனவுத் திட்டம் : இயக்குனர் பொன்ராம் பேட்டி | பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | டைட்டிலை வைத்து விட்டதால் வேறு வழியின்றி பவன் கல்யாணின் பெயரை மாற்றினேன் : ஓஜி இயக்குனர் சுஜித் | டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் |

ஹிந்தியில் ஆமீர்கான், கரீனா கபூர், நாகசைதன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சிங் சத்தா. இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. ராணுவ வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆமீர்கானை போலவே நாக சைதன்யாவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் லால் சிங் சத்தா படத்தில் நீங்கள் நடித்திருக்கும் வேடத்தில் முதலில் கமிட்டாகி இருந்த விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன? என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாகசைதன்யா கூறுகையில், இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக முதலில் விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டதால், பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியால் இப்படத்திற்கு அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த படத்தில் இருந்து அவர் விலகிக்கொண்டார். அப்படி அவர் விலகியதன் காரணமாகவே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்படத்திலும் நான் ஒரு தெலுங்கு பேசும் ஆந்திரா பையனாகவே நடித்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.