'கூலி' பற்றி ஆமிர்கான் எதுவுமே பேசவில்லை: அவர் தரப்பு விளக்கம் | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு |
தமிழ் சினிமா உலகின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தைத் தயாரித்து வருகிறார். அந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளார்.
அவருடைய தயாரிப்பில் இதற்கு முன்பு மற்ற நடிகர்களில் சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', மாதவன் நடித்த 'நள தமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்கள் மட்டுமே தயாராகியுள்ளன. தற்போது அவரது நிறுவனம் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிக்க உள்ள படங்களைத் தயாரிக்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அடுத்து ரஜினிகாந்த், விஜய் நடிக்க உள்ள படங்களையும் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. 'விக்ரம்' படம் மூலம் கிடைத்த மகா லாபத்தை மீண்டும் சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறாராம் கமல்ஹாசன். ரஜினி, விஜய் படங்கள் பற்றிய பேச்சு வார்த்தை முடிவடைந்த பின் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.