ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கார்கி' படம் ரசிகர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பிறகுதான் படம் மீதான பார்வை ரசிகர்களிடம் ஏற்பட்டது. படம் வெளியான பின் இரு தினங்களுக்கு முன்பு சூர்யா இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். “நீண்ட காலத்திற்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறப்பாக எழுதப்பட்ட, சிறப்பாக உருவாக்கப்பட்ட படம். நலம் விரும்பிகள், ரசிகர்கள், மீடியா என அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் படக்குழு பெற்றுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள சாய் பல்லவி, “அனைத்திற்கும் நன்றி சார். உங்கள் உதவியால் தான் கார்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. இதற்காக ஜோதிகா மேடத்திற்கும் நன்றி சொல்லுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.