பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கார்கி' படம் ரசிகர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பிறகுதான் படம் மீதான பார்வை ரசிகர்களிடம் ஏற்பட்டது. படம் வெளியான பின் இரு தினங்களுக்கு முன்பு சூர்யா இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். “நீண்ட காலத்திற்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறப்பாக எழுதப்பட்ட, சிறப்பாக உருவாக்கப்பட்ட படம். நலம் விரும்பிகள், ரசிகர்கள், மீடியா என அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் படக்குழு பெற்றுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள சாய் பல்லவி, “அனைத்திற்கும் நன்றி சார். உங்கள் உதவியால் தான் கார்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. இதற்காக ஜோதிகா மேடத்திற்கும் நன்றி சொல்லுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.